160 பேர்: பெண் வேட்பாளர்கள் வரலாறு
சென்னை:
இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக அளவிலான பெண் வேட்பாளர்கள் வரும்சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மே 8ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 160 பெண்கள்வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் அதிகஅளவிலான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதல் முறை.1991ம் ஆண்டு 101 பெண்கள் அதிக பட்சமாக போட்டியிட்டிருந்தார்கள். இது 1996ம்ஆண்டு 156 ஆக உயர்ந்தது. தற்போது அதிகபட்சமாக 160 பேர் களத்தில் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,222 ஆகும்.இதில் நாகப்பட்டனம், திருத்துறைப்பூண்டி, ஓரத்தநாடு ஆகிய 3 தொகுதிகளில் ஒருசுயேச்சை வேட்பாளர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடும் கட்சி விஜயகாந்த்தின் தேசிய முற்போக்குதிராவிட கழகம். இக்கட்சி 232 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதற்கு அடுத்து பாஜக 225 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
3வது இடத்தில் அதிமுக உள்ளது. இக்கட்சி 188 தொகுதிகளில் போட்டியிடுகிறது.திமுக 132 தொகுதிகளில் மட்டுமே நிற்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சி 164 தொகுதிகளிலும், சமாஜ்வாடி, அகில இந்திய பார்வர்ட்பிளாக் ஆகியவை தலா 62 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.