For Daily Alerts
Just In
திருச்சி-தீ விபத்தில் 2 பேர் பலி-9 பேர் காயம்
திருச்சி:
திருச்சி அருகே வீட்டின் மேல் அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில் ஏற்பட்டபயங்கர தீவிபத்தில் 2 பேர் உடல் கருகி இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
துவாக்குடி அருகே தேவராயபுரி என்ற இடத்தில் ஒரு வீட்டின் மேல்அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த 11 பேர்தங்கியிருந்தனர்.இன்று அதிகாலை இந்த வீட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 2 பேர் உடல் கருகி இறந்தனர். 9 பேர் படுகாயம்அடைந்தனர். தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.
குண்டு வெடித்ததாக சிலரும், மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக சிலரும்கூறியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Friday, April 28, 2006, 5:30 [IST]