விஜய் ரசிசர்கள் மீது சரத்குமார் புகார்
மதுரை:
மதுரையில் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட குமார் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். போகும் இடமெல்லாம் கூட்டம்அலைமோதுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுகவே வெல்லும் என நினைக்கிறேன்.டாடா நிறுவனத்தை தயாநிதி மிரட்டியிருப்பது உண்மை தான். இப்படியே போனால் இந்த வீடு என்னுடையதுஎன்று சொல்லி நம்மையும் மிரட்டுவார்கள். பத்திரிக்கைகளை அடக்குவார்கள். பத்திரிக்கை சுதந்திரம்பறிபோய்விடும்.
நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வன்முறையைத் தூண்டிவிட்டுவிட்டு என் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவதாகபிரச்சாரம் செய்கிறார்கள். இப்போது நான் தான் டாப்லெவல் சூப்பர் ஸ்டார் என்றார்.
டிவி- திமுகவினர் மீது அதிமுக புகார்:
இதற்கிடையே குன்னூர், ஊட்டி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று யார், யார் வீட்டில் கலர் டிவி இல்லை என்றுகேட்டு திமுகவினர் கணக்கெடுப்பு நடத்தியதாக அதிமுக புகார் கூறியுள்ளது.
உங்கள் வீட்டில் கேஸ் ஸ்டவ் இருக்கா?, கலர் டிவி இருக்கா?, நிலம் இருக்கா? வேலையில்லாத இளைஞர்கள்இருக்கிறார்களா? என்று திமுகவுக்கு ஓட்டு விழும் வகையில் இந்தக் கணக்கெடுப்பை திமுகவினர் நடத்துவதாகஅதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதற்காக அச்சடித்த விண்ணப்பங்களை திமுகவினர் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.