இரண்டு, அரண்டு, உருண்டு, புரண்டு!
திருநெல்வேலி:
வைகோ இப்போது போடுகிறார் வேஷம், அவருக்குக் கிடையாது ரோஷம் எனலட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
அதிமுகவிடம் கேலப்பட்டு மீண்டும் திமுகவுக்காக வாக்கு சேகரிக்க கிளம்பியிருக்கும்ராஜேந்தர் பழைய வேகம் குறையாமல், அதே எதுகை மோனை,சொல்லலங்காரத்துடன் பேசி வருகிறார்.நெல்லையில் ராஜேந்தர் பேசியதிலிருந்து சில துளிகள்:
வைகோவை ஜெயலலிதா வைத்தார் உள்ளே, திமுக தலைவர் கலைஞர் கொண்டுவந்தார் வெளியே.
உள்ளே வைத்த ஜெயலலிதாவுக்கு வைகோ கேட்கிறார் ஓட்டு, வெளியே கொண்டுவந்த கலைஞருக்கு வைக்கிறார் வேட்டு.
வைகோ இப்போது போடுகிறார் வேஷம், அவருக்குக் கிடையாது ரோஷம். அதிமுகநிலையோ இன்னும் மோசம்..
கலைஞர் அரிசிக்கு வைத்த விலை இரண்டு. அதைக் கேட்டு அதிமுக அணி நிற்கிறதுஅரண்டு, வைகோ நிற்கிறார் மிரண்டு, இதனால் அவர் ஊரெல்லாம் அலைகிறார்உருண்டு, அந்தக் கூட்டணி போனது மிரண்டு, திமுகவுக்கு வருது கூட்டம்கரைபுரண்டு..
சரத்குமார் மனைவி எடுத்தது சித்தி. இப்போது அலைகிறார் போயஸ் கார்டனை சுத்தி.
வைகோ தேடி வந்தது ரோட்டை, குழப்புகிறார் இப்போது நாட்டை, அளியுங்கள்திமுகவுக்கு ஓட்டை, கலைஞருக்காக காத்திருக்கிறது செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
நான் தாடியை எடுத்தேனா? அன்று முதல் இன்று வரை தாடியுடன்தான் இருக்கிறேன்.தன்மானத்துடனும், உணர்வோடும் மட்டும்தான் வாழ வேண்டும்.
40 கோடி தந்தாலும் தாடி எடுக்க மாட்டேன், 400 கோடி தந்தாலும் தாடி எடுக்கமாட்டேன்.
கலைஞர் கையில் ஆட்சி என்ற சாவியைக் கொடுங்கள், அவர் உங்களுக்கு கலர்டிவியைத் தருவார் என்றார் ராஜேந்தர்.