லீலாவதியை அலையவிட்ட அதிகாரிகள், போலீஸ்
தேனி:
தேனியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதியை அதிகாரிகளும்போலீசாரும் நாள் முழுக்க அலைகழித்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் போட்டியிட இருந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்டார்லீலாவதி. வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னரே ரிலீஸ் ஆனார்.
இதையடுத்து தன்னை அதிமுகவினர் தான் கடத்தியதாக புகார் கூறி எம்ஜிஆர் சமாதியில் உண்ணாவிரதம்இருந்தார். அவரை போலீசார் கைது செய்வோம் என மிரட்டியதால் உண்ணாவிரதத்தை பாதியிலேயேகைவிட்டார்.
இந் நிலையில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யச் சென்றுள்ளார் லீலாவதி. ஆனால்,அவரது பிரச்சாரத்துக்கு அனுமதி தர வேண்டிய அதிகாரிகளும் போலீசாரும் அவரை நாள் முழுவதும்அலுவலகம், அலுவலகமாக அலைய விட்டனர்.
முதலில் தேனி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து அனுமதி கடிதம் கொடுக்கச் சென்றார் லீலாவதி.அவரை மணிக்கணக்கில் காக்க வைத்த லக்கானி, பின்னர் உள்ளே அழைத்தார்.
போய் எஸ்பியைப் பாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து எஸ்.பி. அலுவலகம் சென்றார் லீலாவதி. ஆனால், லீலாவதி வரும் முன்பே எஸ்பி தினகரன்அங்கிருந்து சென்றுவிட்டார். இதைத் தொடர்நது அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் 3 நாள் பிரச்சாரத்துக்கு அனுமதிகேட்டு கடிதம் தந்தார்.
ஆனால், அந்தக் கடிதத்தை இன்ஸ்பெக்டர் வாங்க மறுத்துவிட்டார். போய் ஆண்டிப்பட்டி தாசில்தார்கிட்ட குடுங்கஎன்று கூறி அனுப்பினார்.இதையடுத்து அங்கிருந்து ஆண்டிப்பட்டிக்கு வந்தார் லீலாவதி. அங்கு பெரும் காலதாமதக்குக்குப் பின் தாசில்தார்வைத்தியநாதனிடம் கடிதத்தைத் தந்தார். கடிதத்தை வாங்கிய தாசில்தார், உரிய அனுமதி கிடைத்தவுடன்உங்களுக்கு அனுமதி தரப்படும் என்று கூறி அனுப்பிவிட்டார்.