புரட்சி தலைவியே வெல்வார்-வைகோ நம்பிக்கை
சென்னை - கலிங்கப்பட்டி:
கலிங்கப்பட்டியில் தனது மகன் துரை வையாபுரி, தம்பி மகன் இந்திரஜித், மருமகன்கள் ஜெகதீஷ், ராஜசேகர்ஆகியோருடன் வந்து வாக்களித்தார் வைகோ.
வாக்களிக்க நிற்கும் வைகோவும், அவரது மகன் துரை வையாபுரியும் (வலமிருந்து 4வது) |
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெறும். அதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். மீண்டும் புரட்சித் தலைவியே முதல்வராவார் என்றார்.
எல்லாமே பொய்: சரத்
சென்னை கொட்டிவாக்கத்தில் தனது மனைவி ராதிகாவுடன் வந்து வாக்களித்த பின் நிருபர்களிடம் பேசியசரத்குமார்,
வாக்களித்த பின் ராதிகா, சரத் |
நான் 17 நாட்கள் 97 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தேன். இதில் 85 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். இப்போது வரும் கருத்துக் கணிப்புகள் எல்லாமே பொய். சில பத்திரிக்கைகளும் டிவி சேனல்களும்வாக்காளர்களை திசை திருப்பும் செயல் இது. இது ஜனநாயக விரோதமானது.
இந்தக் கருத்துக் கணிப்புகளையெல்லாம் உடைத்தெறிந்து புரட்சித் தலைவி அம்மா மீண்டும் முதல்வராவார்.
திறன், திறமை, பரிவு, துணிவு, வீரம், விவேகம், கல்வி, அறிவு, தொலைநோக்குப் பார்வை அனைத்தும் பெற்றஒரே தலைவி புரட்சித் தலைவி தான்.
இதனால் தான் இதுவரை வாக்களிக்காதவர்கள் கூட இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவாக்களிக்கிறார்கள் என்றார்த சரத்.