சென்னை என்ஜியரிங் மாணவி படுகொலை-தம்பியின் நண்பர் காரணமா?
சென்னை:
சென்னை அடையாறில் வீட்டில் தனியாக இருந்த பொறியியல் கல்லூரி மாணவிகொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கொலை செய்தது தம்பியின் நண்பரா என்பது குறித்து போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாறு காந்தி நகர் முதல் தெருவில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் நிர்மலா. இவர் ஒரு டாக்டர். இவருக்கு அனிதா என்ற 19 வயது மகளும்,நிஷாந்த் சேவியர் என்ற 17 வயது மகனும் உள்ளனர்.
அனிதா அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். நிஷாந்த்பிளஸ் டூ படிக்கிறார்.
இந் நிலையில் அனிதா வீட்டில் தனியாக இருந்தார். அவரது தாயும், தம்பியும்வெளியே சென்று விட்டு வீடு திரும்பினர். வீடு திறந்து கிடந்தது.
குளியல் அறையிலிருந்து தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டதால் அவர் குளித்துக்கொண்டிருக்கலாம் என தாயார் நிர்மலா நினைத்து பாத்ரூம் கதவைத் திறந்தார்.
அங்கே அனிதா கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்தார்.
அனிதாவின் உடலில் உள்ளாடைகள் மட்டுமே இருந்தன. உடனடியாகபோலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து உடலைபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வீடு முழுவதும் போலீஸார் தீவிர சோதனை போட்டனர். இதில் வீட்டுக் கதவில்மல்லிகைப் பூ மற்றும் ஒரு சட்டை, அதில் ஒரு சிகரெட் ஆகியவை இருந்தன.
அனிதா தனியாக இருப்பதைத் தெரிந்த கொண்ட யாரோ வீடு புகுந்து அனிதாவைகற்பழித்துக் கொலை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் போலீஸாருக்குஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அனிதாவுடன் படித்த மாணவ, மாணவியரிடம் போலீஸார் தீவிரவிசாரணை மேற்கொண்டனர். வீட்டில் சிக்கிய சட்டை அனிதாவின் தம்பியின் சட்டைஇல்லை என்பது தெரிய வந்துள்ளது.மேலும் தனது நண்பர்களில் ஒருவரிடம் இந்த சட்டையைப் பார்த்துள்ளதாக நிஷாந்த்தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நண்பரை போலீஸார் வளைத்துப் பிடித்துதீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அனிதா மீது கொண்ட மோகத்தால் நிஷாந்த்தின் நண்பர் அவரை அடையமுயற்சித்திருக்கலாம். இந்த முயற்சியில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்எனத் தெரிகிறது.