நாடாளுமன்றம் கூடியது: பாண்டி பெயர் மாற்றம்
சென்னை:
பட்ஜெட்டுக்குப் பிந்தைய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
முதல் நாளான இன்று மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜன், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இந்தியபொறியாளர் சூர்யநாராயணா, காஷ்மீரில் தீவிரவாதிகளில் கொல்லப்பட்ட 2 பொது மக்கள், மீரட்டில் தீ விபத்தில்பலியான 58 பேர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.பாண்டிச்சேரி பெயர் மாற்றம்:
நாளை முதல் நடக்கவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் பாண்டிச்சேரியின் பெயரை புதுச்சேரி என்று மாற்றும்மசோதா தாக்கலாகவுள்ளது.
பாண்டிச்சேரியின் பழைய பெயர் புதுச்சேரி தான். பிரஞ்சுக்காரர்கள் 130 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது அதைபாண்டிச்சேரி என்று மாற்றிவிட்டனர். இந்தப் பெயரை மீண்டும் புதுச்சேரி என்று மாற்றக் கோரி சட்டமன்த்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாண்டிச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாகையால் பெயர் மாற்றத்தை நாடாளுமன்றம் தான் செய்ய வேண்டும்.
தயாநிதி விவகாரம்:
இந்தக் கூட்டத் தொடரில் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டது தொடர்பான விவகாரத்தைக்கிளப்பப் போவதாக பாஜக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்ககது.
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் நாடாளுமன்றம் கூடுவது முக்கியத்துவம்பெறுகிறது.