கூட்டணி கட்சிகள் ஆதரவு-பங்கு கேட்கும் காங்
டெல்லி:
தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என அக் கட்சியின்தேசியத் தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
டெல்லியில் 13ம் தேதி கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் பாமக நிறுவனர் ராமதாசும் கருணாநிதியுடன் பேசியுள்ளார். திமுக ஆட்சியமைக்க வெளியில் இருந்துஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே திமுக கூட்டணியில் இடம் பிடித்து ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மத்தியில்தங்களது கூட்டணி அரசில் இடம் பெற்று முக்கிய அமைச்சர் பதவிகளை திமுக பெற்றுள்ளதால், தங்களுக்குமாநிலத்தில் அதிகாரத்தில் திமுக பங்கு தர வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது.
இதை திமுக ஏற்காது என்றே தெரிகிறது. இந் நிலையில் ஆட்சியில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்துநாளை முடிவெடுக்கப்படும் என மாநில காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது.
ஆனால், ஆட்சியில் பங்கு தர முடியாது என சோனியா காந்தியிடம் கருணாநிதி திட்டவட்டமாகக் கூறி விடுவார்என்றே தெரிகிறது.