சரத்-ராதிகாவை ஆபாசமாக திட்டி எஸ்எம்எஸ்
சென்னை:
திமுகவிலிருந்து அதிமுகவுக்குத் தாவிய நடிகர் சரத்குமாரை கடுமையாக திட்டிஎஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சரத்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சுந்தரேசன் போலீஸில் புகார்கொடுத்துள்ளார்.திமுகவில் இருந்த சரத்குமார் தேர்தலுக்கு முன்பு அங்கிருந்து விலகி அதிமுகவில்சேர்ந்தார். தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டார். மத்திய அமைச்சர் தயாநிதி மாறனைகடுமையாக தாக்கிப் பிரசாரத்தில் பேசினார்.
இப்போது ஆட்சி மாறி விட்டது. அதிமுக எதிர்க்கட்சியாகி உள்ளது. திமுக ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்துள்ளது. இந் நிலையில் சரத்குமாரை கடுமையாகத் திட்டி அவரதுசெல்போனுக்கு எஸ்.எம்.எஸ். செய்தி வந்துள்ளது.
சரத்குமாரின் மனைவி ராதிகாவையும் ஆபாசமாக திட்டி அதில் வாசகங்கள் உள்ளன.
இதுகுறித்து நீலாங்கரை போலீஸில் சரத்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சுந்தரேசன்புகார் செய்துள்ளார். எஸ்.எம்.எஸ். அனுப்பிய நபரை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
அதே போல சசிகலாவின் உறவினரான பாடலாசிரியர் சினேகனுக்கும் பாரதிராஜாவின்மச்சானும் தீவிர அதிமுக விசுவாசியான மனோஜ் குமாருக்கும் தொலைபேசி மிரட்டல்வந்துள்ளது.