சரத் காலி செய்த ராஜ்யசபா சீட்டுக்குஜூலை 13ல் இடைத் தேர்தல்-இ.கம்யூ போட்டி?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சரத்குமார் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள ராஜ்யசபா எம்.பி. பதவிக்குஜூலை 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் இருந்து விலகிய சரத்குமார், தனது ராஜ்யசபா எம்.பி. பதவியையும்இழுத்தடித்து ராஜினாமா செய்தார். இதையடுத்து அப்பதவி காலியானது.

அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நிறைவடைவதாகஇருந்தது. அதற்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்து விட்டதால் அந்த இடத்திற்குஇடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜூலை 13ம் தேதி இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஜூன் 26ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்யகடைசி நாள் ஜூலை 3.

போட்டி இருந்தால் ஜூலை 13ம் தேதி காலை வாக்குப்பதிவு நடக்கும். அன்றுமாலையே முடிவு அறிவிக்கப்படும்.

சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10இடங்களை மட்டுமே திமுக ஒதுக்கியது. இதனால் அக்கட்சி அதிருப்தி அடைந்தது.

இதையடுத்து அக்கட்சியை சமாதானப்படுத்தும் பொருட்டு ராஜ்யசபா தேர்தலில் சீட்தரப்படும் என திமுக உறுதியளித்திருந்தது.

அதன்படி தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குசீட் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.அடுத்த ஆண்டு 24ம் தேதி வரை மட்டுமே பதவி வகிக்க முடியும்.

எனவே ஒரு ஆண்டு மட்டுமே பதவி வகிக்கக் கூடிய இப்பதவியை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஏற்குமா என்று தெரியவில்லை.

ராஜ்யசபா எம்.பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற குறைந்தபட்சம்33 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது திமுகவுக்கு சட்டசபையில் 94உறுப்பினர்கள் இருப்பதால் நிறுத்தப்படும் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+