திமுக ஆட்சி விரைவில் கவிழும்: வைகோ
சென்னை:
மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா கூறியதற்கே கோபப்படும் திமுவினர், இந்தஆட்சி விரைவில் கவிழப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதியில் மதிமுக ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்துவைகோ பேசுகையில்,சட்டசபையில் 3 மணி நேரம் பேசியுள்ளார் ஜெயலலிதா. கருணாநிதி எதிர்க்கட்சிவரிசையில இருந்தபோது ஒரு முறையாவது உள்ளே போய் பேசியிருப்பாரா.?லாபியோடு போய் விடுவார்.
லாபி வரை மட்டுமே வந்து சென்ற அவருக்கு ஜெயலலிதாவைப் பற்றி விமர்சிக்கயோக்கியதை இல்லை. திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதாகூறியதால் கோபமடைந்து பேசியுள்ளனர் திமுக அமைச்சர்கள்.
உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். விரைவில் இந்த ஆட்சி கவிழும், மீண்டும்அதிமுக ஆட்சியில் அமரும். திமுகவினருக்கு நன்றி விசுவாசம் இருக்குமானால்,காங்கிரஸ் கட்சியினருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும்.
மத்தியிலே 15 எம்.பிக்களை வைத்துக் கொண்டு 7 அமைச்சர்களைப் பெற்றுக்கொண்டு, தமிழகத்திலே எந்தக் கூட்டணிக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்ததுக்கொள்ளவில்லை. இவர்கள் எப்படி இந்த ஆட்சியை கூட்டணி ஆட்சி என்று கூறமுடியும்?
திமுக மட்டும்தானே ஆட்சி செய்து வருகிறது. அப்படியானால் இது சிறுபான்மைஅரசுதானே? என்றார் வைகோ.