For Daily Alerts
Just In
திருட்டு விசிடி: புதுவையில் திரையுலகினர் பேரணி
பாண்டிச்சேரி:
தமிழகத்தைப்போல புதுவையிலும திருட்டு விசிடியை ஒழிக்க கடும் நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் என்று கோரி தமிழ் திரையுலகின் பல்வேறு சங்கத்தினர்புதுவையில் பேரணி நடத்தி அம்மாநில முதல்வர் ரங்கசாமியிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறுசங்கங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் புதுவையில் நேற்று பேரணி நடத்தினர்.இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் விஜயக்குமார், நடிகர்கள் அருண், ஜீவாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பேரணியின் முடிவில், புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து திருட்டு விசிடியைஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் பிரபல நடிகர், நடிகையர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் யாரும்கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Monday, August 14, 2006, 5:30 [IST]