For Quick Alerts
For Daily Alerts
Just In
பெண்கள் பள்ளிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வந்தது.
மகளிர் பள்ளிக்கு வந்த கடிதத்தில், நான் மனித வெடி குண்டாக வந்து உங்களதுபள்ளியைத் தகர்க்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இங்கு மாணவிகள் படிததுக்கொண்டிருப்பதை பார்த்து மனம் இறங்கி விட்டுவிட்டேன் என்று எழுதப்பட்டிருந்தது.இந்தக் கடிதம் குறித்த தகவல் பரவியதும் பள்ளியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.போலீஸாருக்கும் தகவல் தரப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து பள்ளி முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Tuesday, August 22, 2006, 5:30 [IST]