வெற்றி வாய்ப்பு பிரகாசம்: ஜெ. நம்பிக்கை
சென்னை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகமற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்காகஜெயலலிதா இன்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்குக்கிளம்பினார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
திமுகவுடைய மக்கள் விரோதப் போக்கு, மக்கள் விரோத செயல்பாடு ஆகியவற்றைமக்களிடம் எடுத்துரைப்போம். மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில்அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அங்கு நியாயமான முறையில்தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக வெற்றிபெறும்.
உள்ளாட்சித் தேர்தலிலும் பெருமளவிலான இடங்களில் அதிமுகவும், கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை என்றார்ஜெயலலிதா.
நாளை மதுரை மத்திய தொகுதியில் ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்கிறார். அடுத்தநாள் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவுடன், வைகோ, டாக்டர்சேதுராமன், மியாகான் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு பேசுகின்றனர்.