நான் ஒரு ரப்பர் மரம்!!: ஜெயலலிதா
சென்னை:நான் ரப்பர் மரம் மாதிரி, எனக்கு ரணங்கள் புதிதல்ல என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனவரி 17 என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாழ் தான்.தமிழகத்துக்கு அவர் பொற்கால ஆட்சியை தந்தார். பள்ளி சிறுவர்கள் பசியால் வாடக் கூடாது என்று சத்துணவுத்திட்டம் கொண்டு வந்தார்.
நான் எப்போதுமே சவால்களை எதிர்கொள்ள தயக்கம் காட்டியதே இல்லை. ஏனென்றால் ரப்பர் மரத்துக்குரணங்கள் புதிதல்ல.
எம்ஜிஆருக்கு நான் கொடுத்த சத்தியத்தை காக்கவும் இந்த இயக்கத்தை காக்கவும் உள உறுதியோடு நான்நடத்திய யுத்தம், சந்தித்த சவால்கள், பார்த்த போராட்ட களங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
பல்வேறு அவதூறுகள், துன்மதியாளர்களின் தூற்றுதல்கள், துரோகங்கள், வசவுகள், வக்கணைகள், வஞ்சனைகள்என பல முனை தாக்குதல்கள் வந்தன. புகை நாலு பக்க சுவரை தான் கரியாக்கும், ஆகயத்தை அல்ல. இதனால்அவர்களது தாக்குதல் முனை தான் மழுங்கிப் போனது.
வருங்காலம் கோழைக்கு அல்ல, தைரியசாலிகளுக்கே என்பதை துரோகிகள் புரிந்து கொண்டார்கள். புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசாக என்னை மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றியை எனக்கு பரிசாக தந்ததால் கழகத்தின்ஆட்சி இருமுறை தமிழகத்தில் என் தலைமையில் அமைந்தது.
கழகத்தின் வெற்றிப் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது, தொடர்ந்து கொண்டேஇருக்கும்.
மக்களுக்கு தொண்டு செய்ய நாம் சளைத்தவர்கள் அல்ல. அதனால் தான் பலமிக்க எதிர்க் கட்சியாக நாமும்பலவீனமான, மைனாரிட்டி அரசாக திமுகவும் இருக்கும் நிலையை மக்கள் தந்துள்ளார்கள். இதிலிருந்து ஒருஉண்மை புலனாகும். அதாவது மக்கள் நம் பக்கம் தான் இருக்கிறார்கள்.
மக்களை திசை திருப்ப கருணாநிதி காட்டும் கண் கட்டு வித்தைகள் தான் இலவச திட்டங்கள். அந்ததிட்டங்களையும் சரியாக செயல்படுத்தாமல் ஏழை, எளிய மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சாயம் கொஞ்சம்கொஞ்சமாக வெளுத்துக் கொண்டுள்ளது.
அரைப்படி அரிசியிலே அன்னதானம், அதிலே கொஞ்சம் மேள தாளம் என்ற மோசடி நாடகம் தான் இப்போதுநடந்து வருகிறது.
தமிழகத்தை வழி நடத்தும் திறமை நமக்குத் தான் இருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். நம் பக்கம் மக்கள்இருக்கும் வரை எதிரிகளால் ஒன்றும் செய்துவிட முடியாது.
கழக ஆட்சியை விரைவில் அமைக்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.