பெண் கடத்தல் அதிகரிப்பு: ராமதாஸ் மருமகள்
காஞ்சிபுரம்:தமிழகத்தில் ஈவ் டீசிங்கும், பெண்களைக் கடத்தலும் அதிகரித்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸின் மருமகளும், மத்திய அமைச்சர் டாக்டர்அன்புமணியின் மனைவியுமான செளம்யா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக சமீப காலமாக பாமக போர்க்கொடி உயர்த்தியுள்ளது. திமுக அரசின் ஒவ்வொரு செயலையும் பாமக நிறுவனர் ராமதாஸ்விமர்சித்து வருகிறார்.
இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. மது விலக்கு தொடர்பாக ராமதாஸ் கருணாநிதிக்கு அறிவுரை கூற, அதற்கு முதல்வர் கருணாநிதியும்படு சூடான பதில் கொடுத்துள்ளார்.
இந்தப் பின்னணியில், அன்புமணியின் மனைவி செளம்யா (இவரது தந்தைதான் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி!) தமிழகத்தில் பெண்களின் நிலைமிகவும் மோசமாகி விட்டதாகவும், பெண்களைக் கடத்துவதும், ஈவ் டீசிங் செய்வதும் அதிகரித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாமக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இந்தக் குற்றாச்சாட்டை அவர் தெரிவித்தார்.கூட்டத்தில் செளம்யா பேசுகையில், பெண்களிடம் கேலி, கிண்டல் செய்யும் ஈவ் டீசிங் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
அதேபோல பெண்களைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் செயலும் அதிகரித்து விட்டது. இவற்றைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
தமிழகப் பெண்கள் தங்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராட தயாராக வேண்டும். பள்ளிப் படிப்போடு நின்று விடாமல், மேல் படிப்புபடிக்க பெண்கள் முன்வர வேண்டும். ஏழைகளுக்கும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்றார்செளம்யா.
செளம்யாவின் இந்தக் குற்றச்சாட்டு, திமுக, பாமக பூசலை மேலும் ஊதிப் பெரிதாக்கும் என்று கருதப்படுகிறது.