சட்டசபை கூடியது: சண்முகத்திற்கு இரங்கல்
சென்னை:தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்குஇரங்கல் தெரிவித்த பின்னர் சபை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. முதலில் இரங்கல் குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மறைந்தஉறுப்பினர்கள் சுந்தராம்பாள், மலைக்கண்ணன், சுவாமிதாஸ், பழனிவேலன் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.
பின்னர் மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுநிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சபை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாளை காலை 9.30 மணிக்கு 2007-08ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர்அலுவல் ஆய்வுக் குழு கூடி அவையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்கும். இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாத இறுதிவரை நடைபெறும் எனத் தெரிகிறது.
முல்லைப் பெரியாறு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, இலவசத் திட்டங்களால் மாநில அரசுக்குஏற்பட்டுள்ள நிதிச் சுமை, சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி என எதிர்க்கட்சியினருக்கு அவலாக பல பிரச்சினைகள் சபையைக் கலக்க காத்துள்ளன.
இதுவரை அதிமுக, மதிமுக என இரு எதிர்க்கட்சிகளை மட்டுமே சமாளிக்க வேண்டிய நிலை திமுகவுக்கு இருந்தது. ஆனால் தற்போது பாமகவும்கிட்டத்தட்ட எதிர்க்கட்சி நிலையில் இருந்து சபையைக் கலக்க தயாராகி வருகிறது.
டாஸ்மாக் மதுக் கடை விவகாரம், சிறப்புப் பொருளாதார மண்டலம், சென்னை விமான நிலைய விரிவாக்கம், உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி போன்ற விவகாரங்களை சபையில் பெரிதாக எழுப்ப பாமக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக திமுகவுடன் ஏற்பட்டு வரும்உரசல்களின் விளைவாக, இம்முறை பாமக எம்.எல்.ஏக்கள் சற்றே கடுமையாக பேசக் கூடும், அணுகக் கூடும் என கூறப்படுகிறது.
மது விலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி பாமக மகளிர் அணியினர் மிகக் கடுமையான, நேரடிப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகடாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே மது விலக்குப் பிரச்சினையையும் சபையில் பாமக எழுப்பக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications