சேலம் ரயில் கோட்டம் ஈரோட்டில் நாளை பந்த்
ஈரோடு:முல்லைப் பெரியாறு அணை, சேலம் ரயில் கோட்டப் பிரச்சினையில் கேரள அரசின் போக்கு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக கர்நாடக அரசின் போக்கு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஈரோடு மாவட்டத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கண்டித்தும், சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைவதை தடுப்பது, முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்ளாமல் இருப்பது ஆகியவைகளால் கேரள அரசை கண்டித்தும்,
காய்கறி, பழங்கள் போன்ற சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் தலையீட்டை கண்டித்தும், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதை கண்டித்தும் ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை முழு கதவடைப்பு போராட்டம் நடக்கிறது.
ஈரோடு மாவட்ட ஜவுளி தொழிலாளர்கள் சங்கம், வணிகர்கள் சங்கம், இரு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் சங்கம் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.