கிணற்றில் பிணமாக மிதந்த 3 பள்ளிச் சிறுவர்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளிக்குச் சென்ற 3 சிறுவர்கள் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி சுப்ரமணி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (35), இவரது மனைவி அலமேலு (30). இவர்களுக்கு சென்னையன் (8), திருமலை (5), லோகேஷ் (4) என 3 மகன்கள் உள்ளனர்.
அலமேலுவுக்கும், வெங்கடேஷின் தம்பி கிருஷ்ணனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனித்து வாழ்ந்து வருகின்றனர்.
வெங்கடேஷின் தந்தை பெத்தப்பன்தான் 3 குழந்தைகளையும் பார்த்துக் ெகாண்டிருந்தார். நேற்று மாலை பள்ளிக்கூடம் போய் விட்டு 3 சிறுவர்களும் வீடு திரும்பினர். ஆனால் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து பெத்தப்பன் பல இடங்களிலும் பேரன்களைத் தேடிப் பார்த்தார்.
இந்த நிலையில், ஒரு விவசாயக் கிணற்றில் 3 சிறுவர்களும் பிணமாக மிதப்பதாக தகவல் வந்தது. அங்கு போய்ப் பார்த்தபோது அண்ணன், தம்பிகள் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து குழந்தைகளின் உடல்களை மீட்டனர். அலமேலுவுடன் தனித்து வாழ்ந்து வரும் கிருஷ்ணன், அடிக்கடி ஊருக்கு வந்து வெங்கடேஷிடம் தகராறு செய்வது வழக்கமாம். எனவே அவர் கொலை ெசய்திருக்கலாமா என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.