கிரிக்கெட் பெட்டிங்: 3 தொழிலதிபர்கள் சரண்
சென்னை:கிரிக்கெட் சூதாட்டத்தில் தேடப்பட்டு வந்து 3 தொழிலதிபர்கள் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்தியா, இலங்கை இடையிலான போட்டியின்போது சென்னையில் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நாக்பூர் போலீஸார், சென்னை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து புரசைவாக்கம், டவுட்டன் பகுதியில் போலீஸார் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர். அதில், நந்தகோபால், கிருஷ்ணா, ஜோதி ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து பணம், கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அவர்களின் முதலாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் 14வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தேடப்பட்டு வந்த 3 தொழிலதிபர்களும் நேற்று சரணடைந்தனர்.
பின்னர் 3 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்.