For Daily Alerts
Just In
மலேசியாவில் உலக தமிழ் பண்பாட்டு மாநாடு
சென்னை:உலக தமிழ் பண்பாட்டு மாநாடு மலேசியாவில் நடக்கவிருக்கிறது.
இதுக்குறித்து உலகத் தமிழ் பண்பாடு மாநாட்டின் இந்திய ஒருங்கிணைப்பாளர் அறவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலக பண்பாட்டு இயக்கம் மற்றும் மலாயா பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலேசிய நாட்டு தலைநகரான கோலாலம்பூரில் உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டை நடத்துகிறது.
இந்த மாநாடு ஜூலை மாதம் 20,21,22 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. கட்டுரையாளர்கள் இந்த மாநாட்டுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி அனுப்பலாம்.
உலகத் தமிழர்களின் நிலை என்ற பொதுத் தலைப்பிலும், புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை அன்று முதல் இன்று வரை என்ற சிறப்பு தலைப்பிலும் கட்டுரைகள் எழுத வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Comments
சென்னை literature மலேசியா மாநாடு art culture ஏலம் அதிகாரிகள் மருத்துவமனை போலி பாஸ்போர்ட் july that’s tamil provides tamilnadu news டன் வழங்கும் தளம் ஒருங்கிணைப்பாளர்
Story first published: Tuesday, April 3, 2007, 5:30 [IST]