பொடா வழக்கிலிருந்து நெடுமாறன்-சுப.வீ விடுதலை
சென்னைவிடுதலைப் புலிகளை ஆதரித்து கூட்டம் நடத்தியதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 5 ேபர் அந்த வழக்கிலிருந்து நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் 13ம் ேததி சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் திறனாய்வு கூட்டம் நடந்தது. தமிழ் முழக்கம் பதிப்பாளர் ஷாகுல் ஹமீது என்பவர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், டாக்டர் தாயப்பன், புதுக்ேகாட்டை பாவாணன், பாடலாசிரியர் அறிவுமதி, வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ேடார் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கலந்து ெகாண்டவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ேபசியதாக நெடுமாறன், சுப.வீ, பாவாணன், ஷாகுல் ஹமீது, தாயப்பன் ஆகிேயார் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் சிறையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஐந்து பேரும் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலையாகி வந்தனர். அவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
பின்னர் ஐந்து பேரும் தங்கள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி பொடா மறு ஆய்வுக் கமிட்டியிடம் விண்ணப்பித்தனர். அதை பரிசீலித்த மறு ஆய்வுக் கமிட்டி, ஐந்து பேர் மீதான வழக்குக்கும் முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஐந்து பேர் மீதான வழக்கையும் திரும்பப் பெற முடிவு செய்தது.
இதுதொடர்பாக தமிழக அரசின் வழக்கறிஞர் வெங்கடசுப்ரமணி, பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தியாகராஜ மூர்த்தி, பொடா வழக்கிலிருந்து நெடுமாறன் உள்ளிட்டவர்களை நிரந்தரமாக விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.
இதன் மூலம் பொடா வலையிலிருந்து நெடுமாறன் உள்ளிட்டவர்கள் வெளியில் வந்துள்ளனர்.