For Quick Alerts
For Daily Alerts
Just In
சத்துணவுடன் வாழைப்பழம்: காங். கோரிக்கை
சென்னை:பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுடன் வாழைப்பழமும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ராஜசேகரன் பேசுகையில், சத்துணவுடன் தற்போது வாரம் 3 முறை முட்டை போடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல குழந்தைகளுக்கு வாழைப்பழமும் வழங்க வேண்டும். வாழைப்பழம் உடலுக்கு நல்லது, அதில் சத்து உள்ளது.
இதுதவிர விவசாயிகளுக்கும் இதனால் உற்பத்தி பெருகி, நல்ல வருவாய் கிடைக்கும்.
நதிகளை இணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திருச்சி மாவட்டத்தையும் காவிரி டெல்டா மாவட்டங்களுடன் இணைக்க வேண்டும் என்றார் அவர்.
Comments
Story first published: Wednesday, April 4, 2007, 5:30 [IST]