For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரத்தில் பஸ் மோதி 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

காங்கேயம்:ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே சாலையோர மரத்தில் பேருந்து மோதி 3 பேர் பலியானார்கள். 18 பேர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேலக்காடு பகுதியைச் சேர்ந்த 51 பேர் பேருந்து மூலம் ஆன்மீகச் சுற்றுலாவாக கிளம்பினர். அவர்கள் சென்ற பேருந்து காங்கேயம் அருகே கொங்கு நகர் என்ற இடத்தில் இன்று அதிகாலை போய்க் கொண்டிருந்தபோது, டிரைவர் கட்டுப்பாட்டிலிருந்து பஸ் விலகி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். 18 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக காங்கேயம்-தாராபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X