For Daily Alerts
Just In
3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை
கொழும்பு:இலங்கையின் வட மத்திய மாவட்டத்தில் 3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வட மத்திய மாவட்டத்தில் உள்ள பொலனருவா என்ற இடத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 சிங்கள விவசாயிகள் இன்று காலை அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜெயந்த விக்ரமரத்னே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் திடீரென அங்கு வந்து வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 விவசாயிகளையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டனர் என்றார்.
இருப்பினும் இதுகுறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.
Comments
தமிழர்கள் விடுதலைப் புலிகள் விமர்சனம் வன்னி எம்பிக்கள் அகதிகள் செய்திகள் tamil refugees நார்வே srilanka news sri lanka tamils sri lankan news updates thats tamil ltte sri lankan army law college விடுதலைப் புலிகள் எம்பிக்கள்
Story first published: Thursday, April 5, 2007, 5:30 [IST]