For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் முதல் கார் குண்டுவெடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழத்தில் இதுவரை கார் குண்டுகள் எதுவும் வெடித்த சம்பவங்கள் இல்லை. இதுதான் முதல் கார் குண்டுவெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் முன்பு பாஜக தலைவர் அத்வானி வந்தபோது கார் நிறைய நிரப்பி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அவை அகற்றப்பட்டன.

அதன் பின்னர் தற்போதுதான் கார் குண்டு வெடித்து தமிழகத்தை உலுக்கியுள்ளது.

ஜெலட்டின் குச்சிகளைக் ெகாண்டு வந்தவர்கள் உண்ைமயிலேயே கல் குவாரிக்காக வாங்கி வந்தார்களா அல்லது தமிழ் நக்சலைட் இயக்கங்களுக்காக அவை வாங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரு புறமும் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நின்று கொண்டுள்ளன.

போக்குவரத்தை சரி செய்வதில் போலீஸார் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து சீர் செய்யும் பணியில் அதிக அளவிலான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் ஆயுதங்கள், இரும்புக் குண்டுகள் கடத்தப்பட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விழுப்புரம் அருேக ஜெலட்டின் ெவடிப்பில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டப்பா காரில் குண்டுகள்:

வெடிகுண்டுகளுடன் வந்த அம்பாசடர் கார் மிகவும் பழமையானது. அந்தக் காரை எங்கோ ஒரு காயலான் கடையில் விலைக்கு வாங்கி, சரி செய்து பின்னர் அதில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றிக் ெகாண்டு அந்தக் கும்பல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X