For Daily Alerts
Just In
குமாரசாமியின் சிறுபிள்ளைத்தனம்: கருணாநிதி காட்டம்
சென்னை:தமிழகத்திற்குத் தண்ணீர் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதல்வர் பதவியை தூக்கி எறிவேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருப்பது உச்சகட்ட சிறுபிள்ளைத்தனம் என முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வர்கள் 10 பேருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை முறிந்த நிலையிலும், கூட, எந்த ஒரு முதல்வரும் இப்படிப் பேசியதில்லை.
ஒரு பொறுப்பான முதல்வர் பதவியில் இருப்பவர், அரசியல் சட்டத்தை மதிக்காமல் இவ்வளவு கடுமை காட்டுவது உச்சக்கட்ட சிறுபிள்ளை விளையாட்டு.
குமாரசாமி இவ்வளவு கடுமையாக பேசியிருப்பதை முன்னாள் பிரதமரான அவரது தந்தை தேவெ கெளடா கூட ஏற்க மாட்டார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
karunanidhi கருணாநிதி தண்ணீர் பஸ் கேள்வி தமிழகம் fail போக்குவரத்து முதல்வர் புரளி tamilnadu குமாரசாமி chief minister கர்நாடக that’s tamil provides tamilnadu news டன் வழங்கும் தளம்
Story first published: Saturday, April 7, 2007, 5:30 [IST]