For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸாரை சரமாரியாக தாக்கிய அரிசி கடத்தல் கும்பல்

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ரேஷன் அரிசியை கடத்திய கும்பலிடமிருந்து அரிசியை பறிமுதல் செய்ய முயன்ற போலீஸார் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

கன்னியகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஒரு அரிசி ஆலையில், திருநெல்வேலி சரக உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராசு மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 80 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்ய போலீஸார் முயன்றனர்.

அப்போது திடீரென வந்த 8 பேர் கொண்ட கும்பல் போலீஸாரை சரமாரியாக தாக்கியது. இதில் போலீஸார் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாகர்கோவில் போலீஸார் விரைந்து வந்து ஆலையிலுள்ள அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். ஆனால் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X