For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெ.ஆப்பிரிக்கா அபாரம்: அரையிறுதி வாய்ப்பைஇழந்தது மேற்கிந்திய தீவு அணி

By Staff
Google Oneindia Tamil News

கிரனடா:மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.

டாஸ் வென்ற மேற்கிந்திய அணி தென் ஆப்பிர்காவை பேட் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மித்தும், டிவிலியர்ஸ்சும் களம் இறங்கினர்.

ஆனால் ஸ்மித் 7 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் டிவிலியர்ஸ்சும், காலிஸ்சும் ஜோடி சேர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை அடித்து நெறுக்கினர்.

சிறப்பாக விளையாடிய காலிஸ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவிலியர்ஸ் அதிரடியாக ஆடி ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். இவர் அதிரடியாக அடி 145 ரன்கள் குவித்தார்.

இவர்கள் ஆட்டமிழந்த பின் கிப்ஸ்சும், பவுச்சரும் இணைந்து மேற்கிந்திய பந்து வீச்சாளர்களை மேலும் பதம் பார்த்தனர். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.

ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஒவர் முடிவில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன் குவித்தது. கிப்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்கமால் 61 ரன் குவித்தார். பவுச்சர் 52 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 357 என்ற மெக இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்திலேயே சந்தர்பால் 4 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கெய்ல் 32 ரன்னும், ஸ்மித் 33 ரன்னும், லாரா 21 ரன்னும், பிராவே 6 ரன்னும், போலர்ட் 10 ரன்னும் எடுத்து விரைவில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் சர்வான் மட்டும் நிலைத்து அடி 92 ரன்கள் குவித்தார். இவருக்கு உறுதுணையாக விளையாடிய பாவல் 48 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.

ஆட்டத்தின் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 289 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த தோல்வி மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X