For Daily Alerts
Just In
காவிரி: 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்
சென்னை:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கக் கோரி மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விவாதிக்க வரும் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ளார்.
காவிரி மன்ற தீர்ப்பிற்கு மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என பிப்ரவரி மாதம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மனுவை சட்ட, விவசாய, பாசன நிபுணர்கள் கொண்ட குழு தயாரித்தது.
இது மனு குறித்து விவாதிக்க இம் மாதம் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதற்கான அழைப்பிதழ் அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
karunanidhi கருணாநிதி meeting review கூட்டம் தீர்ப்பு all party meeting அனைத்து கட்சி காவிரி verdict நடுவர் மன்றம்
Story first published: Wednesday, April 11, 2007, 5:30 [IST]