For Daily Alerts
Just In
சென்னையை மேம்படுத்த ரூ.45,000 கோடி!
சென்னை:சென்னை மாநகரை உலக தரம் மிக்க நகரமாக மாற்றுவோம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து சில முக்கிய குறிப்புகளை அவர் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்,
- சென்னை மாநகரை உலகதரம் வாய்ந்த நகரமாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.
- மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற சீரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகர மேம்பாட்டு திட்டம் ரூ. 45,000 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்ட மதிப்பீடு ரூ. 3,400 கோடியாகும். இத்திட்டம் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
- 8 இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடப்பதற்கு ஒரு உயர்மட்ட பாலம், 3 மேம்பாலங்கள், 4 சுரங்க பாதைகளும், கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- புனித ஜார்ஜ் கோட்டையில் முன்புறம் பகுதி, மெரீனா கடற்கரை, எலியர்ட்ஸ் கடற்கரை பகுதி ஆகியவற்றை அழகுப்படுத்தி ரூ. 25 கோடி செலவிடப்படும்.
- நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து மண் சாலைள் மற்றும் கல் ரோடுகளை தார் சாலையாகவும், சிமென்டு சாலைகளாகவும் அடுத்த 4 ஆண்டுகளில் மாற்ற திட்டமிடப்படுள்ளது.
- நகராட்சி, மாநகராட்சிகளில் புதிதாக வரன்முறை செய்யப்பட்ட மனை பிரிவுகளில் 2007, 2008ம் ஆண்டுகளில் தெரு விளக்கு வசதிகள் செய்து தரப்படும்.
- அரசின் வரி வருவாயில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் பங்கினை 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
- சென்னை புறநகரில் 5 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 22 ஊராட்சிகள், ஒரு கண்டோண்ட்மன்ட் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பாதாள சாக்கடை திட்டத்திற்கான திட்ட அறிக்கை ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டுள்ளன.
- நடப்பு ஆண்டில் 60 நகரங்களுக்கு ரூ. 389 கோடி செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டபணிகள் நிறைவேற்றி பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
Comments
plan chennai சென்னை சட்டசபை stalin அமைச்சர் கோடி development சீரமைப்பு scheme முகஸ்டாலின் மாநகராட்சி நேரு தேசிய urban
Story first published: Friday, May 11, 2007, 5:30 [IST]