For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த படகு-12 சிங்களர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த 12 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, தூத்துக்குடிக்கு கிழக்கே மன்னார் வளைகுடா பகுதியில் 12 பேர் கொண்ட மரியா என்ற படகு வந்தது.

அதை சந்தேகத்தின் பேரில் வழி மறித்து சோதனையிட்டபோது அதில் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அதிலிருந்த அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

இவர்களை கைது செய்து தூத்துக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் கடல் கொள்ளையர்களா அல்லது தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்த வந்தவர்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் 5 இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட வந்தவர்கள் மரியா என எழுதியிருந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். எனவே இந்த படகில் வந்தவர்கள் தான் அவர்களை சுட்டு கொன்றிருக்க கூடும் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X