வங்க தேசத்தை சுருட்டிய இங்கிலாந்து
பிரிட்ஜ்டவுன்:உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்ைத இங்கிலாந்து வென்றது.
முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து வங்காள தேசத்தை பேட் செய்ய வைத்தது. களமிறங்கிய வங்காளம் தேசம் 37.2 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. சகிபுல் ஹசன் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். இந்த அணியி 4 வீரர்கள் மட்டும்தான் சிறப்பாக விளையாடி இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.
மற்றவர்கள் எல்லோரும் போன வேகத்திலேய பெவிலியனுக்கு திரும்பி இந்திய அணிைய ஞாபகப்படுத்தினர்.
சாஜித் மகமூத், பனேசர் , ஆண்டர்சன் ஆகியோர் விக்கெட்டுகளை சுருட்டி, வங்க தேசத்தை நிலை குலைய வைத்தனர்.
144 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆட களமிறங்கியது இங்கிலாந்து. ஆனால் வங்காள தேச பௌலர்களின் அபார பந்து வீச்சால் கொஞ்சம் திணறியது இங்கிலாந்து.
ரன் எதுவும் எடுக்காமல் முதலிலேயே அவுட் ஆனார் பெல். ஆனால், அடுத்து வந்த கேப்டன் வாகன், ஸ்ராரஸ் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. ஸ்டாரஸ் 23 ரன்னிலும், வாகன் 30 ரன்னிலும், பிளன்டார் 23 ரன்னிலும் அவுட் ஆயினர்.
ஆனாலும் 110 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட் விழுந்தது.
பின்னர் வந்த காலிங்வுட்டும், நிக்சன் ஜோடி நன்றாக விளையாடி தங்கள் அணியின் வெற்றிக்கு உதவினர். 44.5வது ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதில் தோல்வி அடைந்ததன் மூலம் வங்காள தேச அணி 2 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு செல்லும் தகுதியை இழந்தது.