மத்திய அமைச்சர் ரகுபதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தள்ளுபடி
புதுக்கோட்டை:சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மத்திய அமைச்சர் ரகுபதியும் அவரது குடும்பத்தினரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவியவர் ரகுபதி. இப்போது மத்திய உள்துறை இணையமைச்சராக உள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ரகுபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ரூ.6 லட்சம், 1,300 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.45 லட்சத்துகான சொத்துகள் என மொத்தம் ரூ. 2 கோடி அளவுக்கு சொத்துக்களை கைப்பற்றினர்.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தாக ரகுபதி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மராஜன், வழக்கில் இருந்து ரகுபதி மற்றும் அவர் குடும்பத்தினரை விடுவித்தார். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.