மன்னார்குடியில் அதிமுக பெண் கவுன்சிலர்வீட்டுக்கு தீ வைப்பு- திமுகவினர் வீடுகள் சூறை
மன்னார்குடி:மன்னார்குடியில் அதிமுக கவுன்சிலர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து திமுக பிரமுகரின் வீடு சூறையாடப்பட்டது.
மன்னார்குடியியைச் சேர்ந்த கவுன்சிலர் சுதா வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தீ வைக்கப்பட்டது.
இதற்கு திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன், சதீஷ் ஆகியோரே காரணம் என சுதா போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவைச் சேர்ந்த ராஜா, இளையராஜா, வினோத், கார்த்தி மற்றும் சிலர் வெங்கடேசன் வீட்டை சூறையாடினர்.
இந் நிலையில் தனது வீட்டிலிருந்த 40 சவரன் நகை, ரூ.1.30 லட்சம் பணத்தையும் சூறையாடிவர்கள் கொள்ளையடித்துத் சென்றுவிட்டதாக வெங்கடேசனின் தாயார் சரோஜா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதே போல வேறு சில திமுக பிரமுகர்களின் வீடுகள் மீதும் அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த அரசியல் மோதலால் மன்னார்குடியில் பரபரப்பு நிலவுகிறது. இது சசிகலாவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.