For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரத்தில் உரசிய பஸ்-2 மாணவர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

பள்ளிபட்டு:அரசுப் பேருந்து மரத்தில் உரசியபடி சென்றதால் படிக்கட்டில் பயணம் செய்த 2 பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து பலியாயினர்.

சென்னைக்கு அருகில் பள்ளிப்பட்டு பகுதியிலுள்ள அரசு பள்ளியிலிருந்து மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு திருத்தணி சென்ற அரசு பேருந்தில் வந்துக் கொண்டிருந்தனர். பஸ்சில் கூட்டம நெருக்கியடித்ததால் பல மாணவர்கள் வாயிலில் தொங்கியபடி சென்றனர்.

அப்போது பேருந்து மரத்தில் உரசிய படி சென்றது. இதில் படிக்கட்டில் நின்றுக் கொண்டிருந்த சந்தோஷ்(16), அமரேஷ்(16) ஆகிய 2 மாணவர்கள் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இறந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 வழங்கப்பட்டது. விபத்து நடந்த 4 மணி நேரத்திற்குள் இது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்படியே பொறுப்பில்லாமல் பஸ்ஸை ஓட்டிய டிரைவர் மீதும் நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X