உல்மர்-முதலில் விஷம்..பின்னர் கழுத்து நெரிப்பு
லண்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மருக்கு முதலில் விஷம் கொடுத்து மயக்கமடையச் செய்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாப் உல்மர் கடந்த மாதம் ஜமைக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜமைக்கா போலீசார் விசாரணை நடத்தியதில் சூதாட்டக்காரர்களுக்கு உல்மர் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து ஜமைக்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் உல்மரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என ஜமைக்கா போலீசார் உறுதியாக கூறினார்.
இந் நிலையில் உல்மர் முதலில் விஷம் கொடுத்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை கொலை செய்யப்பட்டுள்ளர் என லண்டலில் வெளியாகும் த சன்டே டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இத்தகவல் ஜமைக்கா போலீஸாருக்கு நெருக்கிய தொடர்புடைய நபர் மூலம் கிடைத்ததாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.
இதற்கிடையில் பிரிட்டனிலிருந்து விசாரணைக்காக ஜமைக்கா வந்துள்ள ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசாரணையை முடித்து விட்டு இந்த வாரம் பிரிட்டன் திரும்பவுள்ளனர். அவர்களது அறிக்கை வெளிவந்தால் இந்த கொலை வழக்கின் முடிச்சுகள் அவிழும்.