போலி ரேஷன் கார்டு-தகவல் தந்தால் ரூ200 பரிசு
சென்னை:போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை பற்றி தகவல் அளித்தால் ரூ.200 சன்மானம் வழங்கப்படும் என உணவு மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சர் வேலு சட்டசபையில் தெரிவித்தார்.
இன்று உணவு மற்றும் கூட்டுறவு மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்க குறிப்புகளை ேவலு தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்
போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் வழங்கும்படி அரசு உத்திரவிட்டுள்ளது.
மேலும் போலி ரேஷன் கார்டுகளை கண்டு பிடிக்க ஒவ்வொரு ரேஷன் கடையிலும் குடும்ப அட்டைதாரர்களின் பட்டியலை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோதுமை பயன்படுத்துவோர் அதிகமாகி வருவதால் 10,000 மெட்ரிக டன் கூடுதல் கோதுமையை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
இந்த நிதியாண்டில் 5 லட்சம் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்புகள் வழங்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்றார் வேலு.