For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வென்றது தெ.ஆப்பிரிக்கா-இங்கிலாந்து வெளியேற்றம்

By Staff
Google Oneindia Tamil News

பிரிட்ஜ்டவுன்:முக்கியமான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. உலகக் கோப்பைப் போட்டியலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. இந்த நிலையில், 4வது அணி யார் என்பதில் குழப்பம் நிலவியது.

Andrew Hall

தென் ஆப்பிரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நேற்று நடந்த போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் இரு அணிகளும் மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியை சந்தித்தன.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீர்ரகள் சடசடவென சரிந்தனர்.

இயான் பெல் 7 ரன்களும், கேப்டன் வாகன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டிராஸ் மட்டும் சற்று சமாளித்து ஆடி 47 ரன்கள் சேர்த்தார்.

Strauss and Boucher

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கெவின் பீட்டர்சன் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். காலிங்வுட் 30 ரன்கள் சேர்த்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி போபாரா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இவர்களைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடாததால், இங்கிலாந்து 48 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 154 ரன்களில் சுருண்டு போனது.

Grameme Smith

பின்னர் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. கேப்டன் ஸ்மித் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினார். 58 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 89 ரன்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக டிவில்லியர்ஸும் சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார்.

19.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது தென் ஆப்பிரிக்கா. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X