For Daily Alerts
Just In
பாக்தாத் அருகே பயங்கர கார் குண்டுவெடிப்பு:200 பேர் பலி - ஈராக்கில் பெரும் பதட்டம்
பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நடந்த 4 கார் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
ஷியா முஸ்லீம்கள் அதிகம் உள்ள சத்ரியா என்ற பகுதியில் முதல் குண்டுவெடிப்பு நடந்தது. ராணுவ சோதனைச் சாவடியில் நின்றிருந்த வாகனக் கூட்டத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காருடன் வந்த தீவிரவாதிகள் பயங்கரமாக மோதினர்.
இதில் 140 பேர் பலியானார்கள். 150 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. இறந்தவர்களின் உடல் பாகங்கள் பல இடங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. அப்பகுதி முழுவதும் மரண ஓலமாக காணப்பட்டது. மினி பஸ்களில் பயணம் செய்த பலர் குண்டுவெடிப்பில் சிக்கி பஸ்சுக்குள்ளேயே எரிந்து கருகினர்.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டது. பிரதமர் மாலிக்கியைக் கடுமையாகக் கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
சதர் நகரில் நடந்த இன்னொரு சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர மேலும் இரு இடங்களில் கார் குண்டுகள் வெடித்துள்ளன. இந்த நான்கு சம்பவங்களிலும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
Comments
ஈராக் thatstamil attack international global world news baghdad பாக்தாத் updates online tamil law college கார் குண்டுவெடிப்பு
Story first published: Thursday, April 19, 2007, 5:30 [IST]