For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ-வந்தார், கையெழுத்து போட்டார், போனார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று சட்டசபை வளாகம் வரை வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.

தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்களான முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒரு புதிய டிரெண்டை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்களில் யார் ஆட்சியில் இருந்தாலும், மற்ற தலைவர் சட்டசபைக்கு வருவதில்லை என்ற புதிய கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை. மாறாக சட்டசபை வளாகம் வரை வந்து கையெழுத்து மட்டும் போட்டு விட்டுச் சென்றார்.

தற்போது அதே பாணியை ஜெயலலிதாவும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஓரிரு முறை மட்டுமே அவர் சட்டசபைக்கு வந்தார். அதன் பின்னர் சட்டசபைக்கு வராமல் வளாகம் வரை வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்கிறார்.

அதன்படி இன்றும் சட்டசபைக்கு வந்தார் ஜெயலலிதா. 2வது நுழைவாயில் வழியாக உள்ளே வந்த ஜெயலலிதா வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்று விட்டார்.

அவரை, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கொறடா கே.ஏ.செங்கோட்டைன் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X