For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை துறைமுகத்தில் தலைமுடி கொள்ளை!!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை துறைமுகத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தலை முடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி உள்ளிட்ட பல்ேவறு கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக தரும் முடி ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த தலைமுடியை வாங்கி வெளிநாடுளுக்கு அனுப்பி பலர் தொழில் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் மட்டும் லட்சக்கணக்கான டன் தலைமுடி இவ்வாறு டெண்டர் மூலம் ஏலத்தில் விடப்படுகிறது. ெசன்னை சூளையில் உள்ள குப்தா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், தலைமுடியை வாங்கி ஏற்றுமதி செய்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட்ட தலைமுடி ெவளிநாடுகளுக்கு ஏற்றுமதி ெசய்வதற்காக சென்ைன துறைமுக வளாகத்தில் உள்ள சென்னை கண்டெய்னர் டெர்மினல் கிட்டங்கியில், இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்த கண்டெய்னரை கப்பலில் ஏற்றும்போது அதன் சீல் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உள்ேள பார்த்தபோது பல லட்சம் மதிப்புள்ள தலைமுடி திருடப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து முடியைத் திருடிய பலே ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X