For Daily Alerts
Just In
அமைதி பேச்சு- ராஜபக்ஷேவுக்கு போப் அறிவுரை
வாடிகன்:இலங்கையில் அமைதி திரும்ப மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்குமாறு அதிபர் ராஜபக்ஷேவுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரோம் தலைநகரான வாடிகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
போப் ஆண்டவர் மற்றும் வாடிகன் உள்துறை அமைச்சர் கார்டினல் டார்கிசியோ பெர்டோன் இருவரையும் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து பேசினார்.
அப்போது போப், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இலங்கையின் வன்முறை- ரத்த பாதைக்கு அமைதிப் பேச்சு வார்த்தை மட்டும் தான் முடிவாக அமையும் என்று கூறினார்.
இதற்கு இலங்கையிலுள்ள 7 சதவீத கிறிஸ்துவர்களும், இலங்கை கிறிஸ்துவ தேவாலயமும் ஒத்துழைப்பு அளிக்கும் என ராஜபக்ஷேவிடம் போப் உறுதியளித்தார் என கூறப்பட்டுள்ளது.
Comments
இலங்கை thatstamil pope அறிவுரை rajapakshe போப் ஆண்டவர் peace talk rome ரோம் srilanka news sri lanka tamils sri lankan கிறிஸ்துவர்கள் வாடிகன்
Story first published: Saturday, April 21, 2007, 5:30 [IST]