For Daily Alerts
Just In
சிகிச்சை- லண்டன் சென்றார் தயாளு அம்மாள்
சென்னை:முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சில காலமாக உடல் நலமின்றி இருந்து வருகிறார். அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை அவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனுக்குக் கிளம்பினார். அவருடன் மகள் செல்வி, குடும்ப டாக்டர் ஆகியோரும் சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் தயாளு அம்மாளை முதல்வர் கருணாநிதி, மகன்கள் மு.க.அழகிரி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
Comments
லண்டன் tamil nadu stalin thatstamil wife மனைவி சிகிச்சை tamilnadu முதல்வர் கருணாநிதி chief minister tamil news தயாளு அம்மாள் kaurnanidhi முக அழகிரி tn political dhayalu ammal
Story first published: Monday, April 23, 2007, 5:30 [IST]