லாரா-வாகனுக்கு ஐசிசி அபராதம்
பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்துடன் நடந்த கடைசி சூப்பர் 8 போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாராவுக்கு சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
பிரிட்ஜ்டவுனில் இங்கிலாந்து, மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையே கடைசி சூப்பர் 8 போட்டி நடந்தது. இப்போட்டியுடன் லாரா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்தப் போட்டியின்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காததால் இரு அணிகளின் கேப்டன்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இரு அணிகளின் வீரர்களுக்கும் அவர்களது சம்பளத்தில் 5 சதவீதமும், லாராவுக்கு 10 சதவீத அபராதமும், இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனுக்கு 20 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
லாராவின் கடைசி போட்டி என்பதால் அவர் பேட்டிங் செய்ய உள்ளே வந்தபோதும், அவுட் ஆகிச் சென்றபோதும் இரு அணிகளின் வீரர்களும் வரிசையில் நின்று அவருக்கு மரியாதை கொடுத்ததால், ஆட்டம் சில நிமிடங்களுக்குப் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.