For Quick Alerts
For Daily Alerts
Just In
போலி விசா: துபாயிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்ட 39 இந்தியர்கள்
துபாய்:இந்தியாவிலிருந்து போலி விசா மூலம் துபாய்க்கு சென்ற 39 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நேற்று காலை இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் இந்த 39 பேரும் துபாய் சென்றனர். அங்கு துபாய் குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களுடைய விசாக்களை சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் வைத்திருப்பது போலி விசாக்கள் என தெரிய வந்ததால் 39 பேரும் காவலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் இவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புமாறு துபாய் குடியேற்றதுறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து 39 பேரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments
arrest கைது இந்தியா passport release துபாய் officers டெல்லி immigration விசா indian airlines இந்தியன் ஏர்லைன்ஸ் international காவல் fake போலி world news
Story first published: Tuesday, April 24, 2007, 5:30 [IST]