பெண்ணை தாக்கிய காங் எம்எல்ஏவுக்கு ஜாமீன்
சென்னைஅம்பேத்கார் பிறந்த நாள் விழாவின் போது தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டரும், மகளிர் ஆணைய உறுப்பினருமான ஆலிஸ் மனோகரியை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயக்குமார் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 14ம் தேதி அம்பேத்கார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களுக்குள் அடி, தடி ஏற்பட்டது. இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் ஆலில் மனோகரி தாக்கி, அவரது சேலையை பிடித்து இழுத்து சிலர் மானபங்கபடுத்தினர்.
இதுகுறித்து மனோகரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயக்குமார் தூண்டுதலின் பெயரில் அவரது ஆதரவாளார்கள் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் இந்த வழக்கில் தன்னை கைது செய்யமால் இருக்க சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இதற்கிடையில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், ஜெயக்குமாரை விமர்ச்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
காங்கிரசில் இல்லாதவர்களை சத்திய மூர்த்தி பவனுக்கு அழைத்து வந்து அம்பேத்கார் பிறந்த நாளில் தகராறில் ஈடுபட்ட அந்த விழாவையே கொச்சைப்படுத்திய சம்பவத்தை காங்கிரஸார் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.