For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

27%: திமுக, பாமக, லாலு, பாஸ்வான் தீவிரம்-இன்று ஐமுகூ-இடதுசாரிகள் ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:பிற்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில் முடிவு எட்டும் பொருட்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், இடது சாரிக் கட்சிகளின் தலைவர்களும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரைவக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், இட ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

ஆனால், இக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இடதுசாரிக் கட்சிகளுடனும் கூட்டணிக் கட்சிகளுடனும் இன்று ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக நேற்று பிரதமரை தனித்து சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்ேபாது பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு வழக்கம் போல மேற்கொள்வது எனவும், பிற்படுத்தப்பட்ேடாருக்கான மாணவர் சேர்க்கையை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைத்து விட்டு பின்னர் மேற்ெகாள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டது.

ஆனால், பின்னர் நடந்த அமைச்சரைவக் கூட்டத்தில் மத்திய அரசின் இந்த யோசனைக்கு திமுக, பாமக, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்தே ஐக்கிய முற்ேபாக்குக் கூட்டணித் தலைவர்களும், இடது சாரி தலைவர்களும் ஆலோசிக்கலாம் என் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே, இட ஒதுக்கீடு பிரச்சினையில் தனித் தனி மாணவர் சேர்க்கை என்ற அர்ஜூன் சிங் யோசனையை ஏற்குமாறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சமாதானப்படுத்தும் பொறுப்பை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பிரதமர் கொடுத்துள்ளார்.

ஆனால் இதை பாமக, திமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சிகள் ஏற்கவில்லை. மாறாக, இதுகுறித்து நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இதுெதாடர்பாக விவாதிக்க வேண்டும் என அவை கோரியுள்ளன. ஆனால் அைத மத்திய அரசு ஏற்கவில்லை.

இன்றைய கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என ஐக்கிய முற்ேபாக்குக் கூட்டணிக் கட்சிகள் கருதுகின்றன.

நேற்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல், ப.சிதம்பரம், எச்.ஆர்.பரத்வாஜ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து ெகாண்டனர்.

இந்த ஆண்டே 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஐஐஎம், ஐஐடிகளில் அமல்படுத்த வேண்டும் என திமுக, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாமக, பாஸ்வானின் கட்சி ஆகியவை ஒற்றைக் காலில் நிற்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X