ராமேஸ்வரம் கோவில் உண்டியல்கள் உடைப்பு!பல லட்சம் பணம், நகை திருட்டு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகை ஆகியவை திருட்டு போயுள்ளன.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோவிலின் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர தங்க, வெள்ளி காணிக்கைகாகவும் தனித் தனியாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆளுயர உண்டியலின் 3 பூட்டுக்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.
அதேபோல, நகை காணிக்கை உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகளும் திருடப்பட்டிருந்தன. திருடப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
ராமநாதசுவாமி கோவிலில் திருட்டு போவது இதுவே முதல் முறை என்பதால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.